Serial

தாலாட்டு சீரியல் கிருஷ்ணா பற்றி தெரியாதவை!

Thalattu vijay biography: சன் டீவில நிறைய சீரியல் பிரபலமா ஓடிட்டு இருக்கு. இந்த சேன்னல ஓடற நிறைய சீரியல் நிறைய பேரோட மனசுல இடம் பிடிச்சு இருக்குனு சொல்லலா. இந்த சேன்னல் ரொம்ப வருசமா ஓடிட்டு இருக்கு.

சிலருக்கு சீரியல் பாக்கலனா தூக்கமே வராது. சீரியல் பாக்கறது ஒரு அடிக்க்ஷன் மாதிரி ஆகிடுச்சு. முக்கியமா நிறைய குடும்ப பெண்கள் விரும்பி பாக்கறாங்கனு சொல்லலா. இப்போலா குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் கூட சீரியல் பாக்க ஆரமிச்சுட்டாங்க.

இந்த மாதிரி அடிக்க்ஷனா இருக்கறவனளுக்காக நிறைய சீரியல் எடுத்துட்டு இருக்காங்க. எந்த மாதிரி சீரியல் வந்தாலும் அதுக்கு முக்கியத்துவம் குடுத்து பாக்கறதுனால நிறைய சீரியல் பிரபலமாகி இருக்கு. சீரியலில் நடிக்கர ஹீரோ ஹீரோயின்காக கூட நிறைய பேரு சீரியல் பாக்கறாங்க.

அந்த மாதிரி நிறைய பேரு பிடிச்சு பார்த்த ஹீரோ கிருஷ்ணா. இவர் இப்போ நடிச்சுட்டு இருக்கர சீரியல் தாலாட்டு இந்த சீரியல் இப்போ ரொம்பவே பிரபலம் ஆகிட்டு இருக்குனு சொல்லலா.

சன் டீவில திங்கள் முதல் சனி வரை மதியம் 2:30 மணிக்கு ஒளிபரப்பாகர சீரியல் தாலாட்டு. இந்த சீரியல் 26 ஏப்ரல், 2021 அன்று டிவியில் ஒளிபரப்பப்பட்டது.

சீரியல் சூப்பரா போயிட்டு இருக்கு. இந்த சீரியலில் இசை கதாப்பாத்திரத்தில் சுருதி ராஜ் நடிச்சுட்டு இருக்காங்க. இவங்களுக்கு ஜோடியா விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கறவங்களோட பெயர் மற்றும் அவங்களோட பயோகிராஃபி பத்தி பாக்கலா.

கிருஷ்ணா தனிப்பட்ட தகவல்:

தாலாட்டு சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கிர இவங்களோட உண்மையான பெயர் கிருஷ்ணா. இவங்க ஒரு பிலிம் ஆக்டர் அது மட்டும் இல்லாம, இவங்க ஒரு சீரியல் ஆக்டரும் கூட. இவங்க ஆகஸ்ட் மாதம் 1 ஆம் தேதி 1981 ஆம் ஆண்டு பிறந்தாங்க.

இப்போ இவரோட வயசு 38. இவங்க சென்னையில் பிறந்து இருக்காங்க. இவங்களோட அப்பா பெயர் ரகுநந்தன், இவங்களோட அம்மா பெயர் நளினி ரகுநந்தன். கிருஷ்ணா பிறந்தவுடனே அவங்க ஃபேமிலி எல்லாருமே டெல்லிக்கு போய்ட்டாங்க. இவங்க வளைந்தது படிச்சது எல்லாமே டெல்லிலதா.

இவங்களுக்கு சின்ன வயசுல இருந்தே நடிக்கறதுனா ரொம்ப பிடிக்கு. அப்போவே நடிப்புக்கு முக்கியத்துவம் குடுத்து இருக்காரு. இவரோட இந்த ஆர்வத்துனாலதா நடிப்பு திறமையில் முன்னேறி இருக்காரு.

படிப்பு:

கிருஷ்ணா அவரோட முறையான பள்ளி படிப்பை டெல்லியில் இருக்கற கேந்திரிய வித்யாலயா பள்ளியில் படுச்சுருக்காங்க. இவங்க டெல்லியில் இருக்கற Prila Institute Of Technology – இல் காலேஜ் படிச்சு முடிச்சு இருக்காரு. படிக்கும் போதே இவங்க ஒரு நல்ல நடிகரா வரணும்னு யோசிச்சு இருக்காங்க.

காலேஜ் கம்ப்ளீட் பண்ணி முடிச்சதும் இவங்களுக்கு நடிப்பு மேல ரொம்ப ஆர்வம் வந்து இருக்கு. அதனால 3 மாதம் ஆக்ட்டிங் கிளாஸ் asia academy of film and technology ல join பண்ணி டெல்லியில் அந்த கோர்ஸை முடிச்சு இருக்காரு. இதுக்கு அப்பறம் அவரோட நடிப்பு மேல அவருக்கு நம்பிக்கை வந்து நடிக்க ஆரமிச்சு இருக்காரு.

சீரியல் வாழ்கை:

கோர்ஸை முடிச்சுட்டு சென்னை வந்த இவங்க முதல் முதலில் நடிச்ச சீரியல் என்னனு பார்த்தா 2003 ல பாலச்சந்தர் இயக்கி ரிலீஸ் ஆனா சஹானா என்ற சீரியல். இந்த சீரியலில் சூர்யா என்ற ரோல்ல நடிச்சு இருக்காங்க. அந்த சீரியல் முடிச்சதுக்கு அப்பறம் சன் டீவில 2004 ல ஒளிபரப்பான சிதம்பர ரகசியம் சீரியலில் நடிச்சாங்க. இந்த சீரியல்காக இவருக்கு best male ஆக்டர் அவார்ட் கிடைச்சு இருக்கு.

அதுக்கு அப்பறம் செல்வி, நான் அவன் இல்ல என ஒரு 10 க்கும் மேற்பட்ட சீரியலில் நடிச்சு இருக்காங்க. சன் டிவி , ஜெயா டிவில நடிச்சு இருக்காரு. இவங்களோட ஒவ்வொரு சீரியல்க்கு அப்பறம் இவரோட நடிப்பு மேல இவருக்கு முழு நம்பிக்கை வந்து மேலும் நடிக்க தொடங்கினார். இதுக்கு அப்பறம் நடிப்பு மேல ஒரு மிக பெரிய ஆர்வம் வச்சு நடிக்க ஆரமிச்சாரு. இவர் நடிப்பால் நிறைய பேர கவர்ந்து இருக்காரு.

இப்போ இவங்க நடிச்சதுலையே ரீசென்ட் ஆனா சீரியல் என்னனு பாத்த சன் டீவில 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் என்ற சீரியல். இந்த சீரியலில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடிச்சு இருக்காங்க. பிரகாஷ் கேரக்டர் ரொம்ப ஒரு பெரிய ஹிட்டாகி இருக்கு.

இந்த சீரியல்க்காக 2018 ஆம் ஆண்டு சன் குடும்பம் விழாவில் இவங்க best actress male award வாங்கி இருக்காங்க. அதுக்கு அப்பறம் இப்போ ரீசெண்டா பாத்த 2019 ல ரன், நாயகி சீரியலில் ஒரு ரோல் பண்ணாங்க. அதுக்கு அப்பறம் தாலாட்டு சீரியலில் இப்போ கரெண்ட்ல விஜய் கதா பாத்திரத்தில் நடிச்சுட்டு இருக்காங்க. சீரியல் மட்டும் இல்லாம இவங்க நிறைய பிலிம்ஸும் நடிச்சு இருக்காங்க.

திரைப்பட வாழ்க்கை:

கிருஷ்ணா சீரியல் மட்டும் இல்லாம படைத்தலையும் நடிச்சு இருக்காரு. இவர் நடிச்ச படம் என்னனு பாத்த 2006 ல அழகிய அசுரா படத்துல சஞ்ஜய் கதாபாத்திரத்தில் நடிச்சு இருக்காரு, இதய திருடன், பலம், ஈரம், அனந்தபுரத்து வீடு… இவங்க டோட்டலா ஒரு 7 லுக்கு மேற்பட்ட படம் நடிச்சு இருக்காங்க. இவங்க நடிச்ச படங்களில் ஆனந்தபுரத்து வீடு பிலிம் இவரோட மனைவி கூட சேர்ந்து நடிச்சு இருக்காங்க. அது மட்டும் இல்லாம இந்த படம் ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் குடுத்து இருக்கு.

கிருஷ்ணா ஆக்டர் கமல் கூட நடிக்க மறுத்து இருக்காரு. இவர் கமல் நடிச்ச டாக்டர். வசூல்ராஜா (M.B.B.S) படத்துல நடிக்க சான்ஸ் கெடச்சு இருக்கு. இந்த படத்துல கேன்சர் பேஷண்டா நடிக்க சொல்லி இருக்காங்க. ஆனா இதை அவர் ஒரு சில காரணத்தினால் நடிக்க மறுத்துட்டாரு.

திருமண வாழக்கை:

இவரோட மனைவி பெயர் சாயா சிங். இவங்களும் ஒரு ஆக்ட்டரா நடிச்சுட்டு இருக்காங்க. இவங்களுக்கு ஜூன் 2012 ல கல்யாணமாகி இருக்கு. திருமணத்துக்கு அப்பறமா இவங்க ரெண்டு பேரும் சேர்ந்து காஞ்சனா கங்கா என்ற தெலுங்கு சீரியலில் நடிச்சாங்க.

இவங்க திருமணத்துக்கு அப்பறம் ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர் உதவியா இருந்து இருக்காங்க. இவங்க ரெண்டு பேருக்கும் சன் குடும்பம் விழாவில் reel and real jodi சிறப்பு விருது கிடைச்சது. அந்த ஃபங்ஷன்ல கிருஷ்ணா சாயா கிட்ட ப்ரொபோஸ் பண்ணதுனால சாயா ரொம்ப எமோஷனல் ஆகிட்டாங்க. இந்த அவார்ட் வாங்கும் போது சாயா மற்றும் கிருஷ்ணா ஒருத்தருக்கு ஒருத்தர் அவங்க காதலை வெளிப்படுத்தனாங்க. இவங்க ரெண்டு பேரும் சின்னத்திரை பெஸ்ட் கப்பிள்னு நிறைய பேரு சொல்லி இருக்காங்க.

கிருஷ்ணா அண்ட சாயா இன்டெர்வியூ:

ஒரு இன்டெர்வியூவில் சாயா சிங் கிட்ட அங்கேர் கேட்ட முதல் கேள்வி உங்க கால் விரலை காட்டுங்கனு கேட்டு இருக்காங்க. அதுக்கு கிருஷ்ணா இவங்களுக்கு இப்போவும் கோவம் அதிகமா வரும்னு சொல்லி இருக்காரு. இன்டெர்வியூவில் கிருஷ்ணா தெய்வமகள் சீரியலோட டையலாக் ரொம்ப எமோஷனலா பேசி இருக்காரு. இதை பாத்து சாயா ரொம்ப ஆசார்யமா பாத்தாங்க.

இவங்களோட லவ் ஸ்டோரி ஆனந்தபுரத்து வீடு படம் பண்ணும் போது ஆரமிச்சு இருக்கு. கிருஷ்ணா சாயா கூட பேசுறதுக்கு முன்னாடி அவங்களோட அம்மா கூட ரொம்ப கிலோசா இருந்து இருக்காரு. இந்த விஷயம் சாயாக்கு தெரிய வரும் போது ரொம்ப ஆச்சர்ய பட்டு இருக்காங்க.

கிருஷ்ணா ஷூட்டிங் அப்போ புக் படிச்சுட்டு இருக்கும் போது சாயா என்ன பண்றிங்கனு கேட்டு பேச ஆரமிச்சு இருக்காங்க. அதுக்கு அப்பறம் சாயா சிங் கிருஷ்ணா கிட்ட ஒரு பிராங்க் பண்ணி இருக்காங்க. அந்த பிராங்க் மூலியமா ரெண்டு பேரும் க்ளோஸ்ஸா பேச ஆரமிச்சு இருக்காங்க. இதை கிருஷ்ணா இன்டெர்வியூவில் சொல்லி இருக்காரு. சாயா சிங் மன்மத ராசா பாட்டில் ஆடான டான்ஷ பாத்து கிருஷ்ணா ஆச்சர்ய பட்டு
இருக்காரு.

லாக்டௌன் டைம்ல்ல நடந்த இன்டெர்வியூவில் கிருஷ்ணா அவரோட மனைவி மற்றும் குடும்பத்துக்கோடா இருக்கறது ரொம்ப சந்தோசமா இருக்குனு சொல்லி இருக்காரு. சாயா ஷூட்டிங் அப்போ கூட கிருஷ்ணா கூடவே இருந்து அவரை பத்துப்பாங்கனு கிருஷ்ணா சொல்லி இருக்காரு. இவங்க மனைவி இவங்க வாழ்க்கையில் வந்தது ஒரு பெரிய வரம்னு சொல்லி இருக்காரு.
இவங்களுக்குள்ள என்ன சண்டை வந்தாலும் அவங்களோட லவ் எப்போவும் குறஞ்சது இல்லனு சொல்லி இருக்காங்க.

தாலாட்டு சீரியல்:

தாலாட்டு கதை விஜய்யை சுற்றி வருகிறது. அவர் ஒரு தாயின் அன்பை ஒருபோதும் அனுபவிக்கவில்லை. அவர் தனது முந்தைய கட்டத்தில் தனது தாய் அவரிடமிருந்து பிரிந்துவிட்டார். இசை என்பவரை மணந்து விஜய் ஒரு அழகான குடும்பத்தை சேர்க்கிறார்.

அவர் தனது குடும்பத்தின் மீது மிகவும் கவனம் கொண்டவர். அவர் பெற்றோர் இல்லாத நபர். அவர் தனது தாயை அறிந்திருக்கவில்லை. கைவிடப்பட்ட குழந்தையாக வளர்ந்தார். விஜய் ஒரு தாயின் அன்புக்காக வேண்டுகிறார். அதன் மூலம் தனது அறியப்படாத வாழ்க்கையில் கடுமையாக யோசிக்க விரும்பவில்லை. அவர் குடும்ப துரோகத்தால் பாதிக்கப்பட்டவர்.

அவரது தாயார் பணிப்பெண்ணாக தங்கள் வீட்டிற்குள் நுழையும் போது வாழ்க்கை ஒரு திருப்பத்தை ஏற்படுத்துகிறது. உண்மையை
அறியாதவர் இசை, மீண்டும் தாயையும் மகனையும் ஒன்றிணைக்க முடியுமா? அவர் தனது தாயை அங்கீகரிப்பாரா இல்லையா என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது. இந்த கதையில் பாசம் எப்படி வெளிப்படுது மற்றும் பாசத்தோடு உணர்வு பற்றி சொல்லி இருக்காங்க.

இந்த கதை அம்மா மகன் பாசத்தை வெளிப்படுத்தி இருக்கு. இருப்பவர்களுக்கு அம்மாவோட அருமை புரிவதில்லை. இந்த கதையில் இருக்கர மாதிரி நிறைய பேரு பாசத்துக்காக நிஜ வாழ்க்கையில் ஏங்கிட்டு இருக்காங்க. இந்த கதை அவளோட உணர்வுகளை வெளிப்படுத்தி இருக்கு.

இந்த சீரியல்க்கு பிறகு கிருஷ்ணா இந்த மாதிரி நிறைய நடிப்பாருனு எதிர்ப்பார்க்கப்படுத்து. இந்த சீரியல் பாக்கறவங்களுக்கு இந்த கதையோட உணர்வு புரியும். இந்த கதை இன்னும் பல சுவாரசியங்களோட போகும்னு நம்பப்படுது.

மேலும் பல சுவாரசியமான சீரியல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் …

5 thoughts on “தாலாட்டு சீரியல் கிருஷ்ணா பற்றி தெரியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube