Serial

nini 2 பற்றிய ரக்ஷிதா எமோஷனல் வீடியோ!!!

ரக்ஷிதா தினேஷ், இவங்க ஒரு இந்திய தொலைக்காட்சி நடிகை. இவங்க தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழி தொடர்களிலும் நடிச்சிட்டு இருக்காங்க. இவங்க பல டிவி சேனல்களிலும் கதாநாயகியாக நடித்திருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டு பிரபல தொடரான “சரவணன் மீனாட்சி 2” மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றாங்க. அன்று முதல் இன்று வரையிலும் ரக்ஷிதா “மீனாட்சி” என்ற பெயரிலேயே ரசிகர்களால் அழைக்கப்படறாங்கனு சொல்லலாம் அந்த அளவிற்கு இந்த கேரக்டர் பேமஸ் ஆகியிருக்கு.

ரக்ஷிதா, முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட “பிரிவோம் சந்திப்போம்” என்ற தொடரில் ஜோதி என்ற கேரக்டர் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானங்க. அதற்கு பின், சன் டிவியில் இளவரசி, ஈ டிவியில் ஸ்வாதி சீனுகுழு, ஜீ தமிழில் நாச்சியார்புரம் போன்ற பல நாடகங்களிலும் நடித்திருக்காங்க. இவங்க சீரியல் தொடர்களில் மட்டும் இல்லாமல் பல ரியாலிட்டி ஷோக்களிலும் போட்டியாளராக பங்கேற்றுக்காங்க. திரு&திருமதி கிளாடிஸ், ஜூனியர் சீனியர், ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் 3.0 போன்ற ஷோக்களிலும் போட்டியாளராகவும், நடுவராகவும் இருந்துருக்காங்க.

மேலும் ரக்ஷிதா சில திரைப்படங்களிலும் நடித்திருக்காங்க. கன்னட படமான பாரிஜாத, ரங்கநாயக என்ற படங்களிலும், தமிழ் படமான “உப்பு கருவாடு” என்ற படத்திலும் நடித்திருக்காங்க. தற்போது ரக்ஷிதா விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் “நாம் இருவர் நமக்கு இருவர்” என்ற தொடரில் நடித்து வராங்க. இந்த நிலையில் ரக்ஷிதா நடிக்கும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் சில நாட்களாக இவங்க வரது இல்லை. அதற்கான காரணத்தை ரசிகர்கள் பலரும் கேட்டு கொண்டிருந்த நிலையில் ரக்ஷிதா பதில் சொல்லிருக்காங்க.

மேலும் இந்த தொடரில் ரக்ஷிதா நடிக்காமல் போனதற்கு காரணமாக பல வதந்திகளையும் சொல்லிட்டு இருக்காங்க. ரக்ஷிதா பிக் பாஸ்ஸில் பங்கேற்க போவதாகவும், பெரிய பட்ஜெட்டில் நடிக்க போவதாகவும் வதந்திகளை சொல்லிட்டு வராங்க. இந்த நிலையில் ரக்ஷிதா தன்னுடைய வலைதள பக்கத்தில் நான் ஏன் நாம் இருவர் நமக்கு இருவர் என்ற தொடரில் நடிக்காமல் போனேன் என்று எனக்கே தெரியாது, மேலும் நான் நடித்தாலும் நடிக்கவில்லை என்றாலும் அந்த தொடரில் எந்த வித்தியாசமும் இருக்காது என்றும் சொல்லிருக்காங்க.

மேலும் இது போன்ற வதந்திகளை பரப்ப தேவை இல்லை என்றும் எது நடக்கணுமோ அது தானாகவே நடக்கும் என்றும் சொல்லிருக்காங்க. இந்த ஸ்டோரியோட இந்த லைன்ல நான் இல்லாமல் போனதற்கு ஸ்டோரி பேட்டர்ன் காரணமாக இருக்கலாம், சில சமயம் ஸ்டோரி ட்விஸ்ட் வரும் அதில் நான் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் சொல்லிருக்காங்க. மேலும் எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் தருணத்தில் நான் எதையும் தவறவிடமாட்டேன் இருக்கும் நேரத்தை பொருத்து திட்டமிட்டு என் வேலைகளை முடிப்பேன், இனிமேலும் எந்த வதந்திகளையும் பரப்பாதீங்க எனவும் சொல்லிருக்காங்க.

body shaming பற்றி பேசிய தீபா!!.. எமோஷனல் ஸ்பீச்..

தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிட்டு இருக்கற வீடியோ என்றால் அது தீபா body shaming பற்றி எமோஷனலாக பேசிய வீடியோ என்றே சொல்லலாம். இவங்க இந்த வீடியோவில் ரொம்ப ப்ரேவா பேசி
இருகாங்க. இந்த வீடியோ நிறைய பேருக்கு பிடிக்கும் வகையில இருந்து இருக்கு என்றே சொல்லலாம்..

இவர்களுடைய இந்த வீடியோவை பார்த்த நடிகர் பால சரவணன் அவருடைய ட்விட்டர் பக்கத்தில் போட்டு பல பேருக்கு ஷேர் பண்ணி இருக்காரு.. தீபா நிஜ வாழ்க்கையில் ரொம்ப இன்நசென்ட் என்று
நமக்கு தெரியும். இவங்க ரீசெண்டா CWC ஷோ மூலம் நிறைய பேருக்கு அறிமுகம் ஆனாங்க. இந்த ஷோவ்க்கு அப்பறம் இவங்க நிறைய பேர் மனசில் இடம் பிடிச்சாங்க என்றே சொல்லலாம்.

தீபா நிஜ வாழ்க்கையில் இன்னேசென்ட் என்றாலும் இவங்களுடைய நடிப்பு natural நடிக்கற வகையில் இருக்கும் என்றே சொல்லலாம். இவங்க தற்போது நிறைய சீரியலில் நடிச்சுட்டு இருக்காங்க. CWC ஷோவ்க்கு
அப்பறம் இவங்க தற்போது விஜய் டிவில் Mr & Mrs சின்னத்திரை ஷோவில் பங்கேற்று இருகாங்க. இந்த நிலையில்தா இவங்க விஜய் டிவியில் நடந்த ஒரு ப்ரோக்ராமில் கலந்துகிட்டாங்க.

இந்த ப்ரோக்ராமில் போட்டியாளர் ஒருவர் இவங்களுடைய உருவத்தை கேலி செஞ்சு இருக்காரு. இதனால ரொம்ப வருத்தத்தில் இருந்த தீபா கோவ படாமல் ரொம்ப நிதானமா கேலி
செஞ்சவர் கிட்ட ஏன் தம்பி நீ என்ன சொல்லி இருந்தாலும் நான் சிரிச்சு இருப்ப ஆனால் நீ என் உருவத்தை பற்றி பேசிட்ட அதனால எனக்கு ரொம்ப கஷ்ட்டமா இருக்கு என்று சொல்லிட்டு, என்னோட
குடும்பத்துக்கு நான் இரண்டு வாரிசுகள் கொடுத்து இருக்க.

நான் இரண்டு உயிர்களை கொடுத்து இருந்து எல்லாத்தையும் தியாகம் செஞ்சு இருக்கற ஒரு தாயை நீ எப்படி கேலி செய்யலாம், நான் போனாதா என் குழந்தைகள் என்ன அம்மான்னு வந்து கட்டி
பிடிச்சுப்பாங்க ஐஸ்வரியாவோ இல்லை கிளியோ பட்ராவோ வந்தா அதை பண்ணுவாங்களா என்று எமோஷனலாக பேசி இருக்காங்க. ஏனென்றால் என்னோட குழந்தைங்களுக்கு நான்தா அழகு என்று சொல்லி இருக்காங்க

தயவ செஞ்சு எந்த தாயுடைய உருவத்தையும் கேலி பண்ணாதீங்க என்று கேலி செஞ்சவர் மட்டும் இல்லாமல் அங்க இருந்தவங்க எல்லாருடைய மனசையும் ஏன் இந்த வீடியோவை பார்த்தவர்கள்
மனசையும் தீபா மாத்தி இருக்காங்க என்றே சொல்லலாம். உருவத்தை வைத்து கேலி செய்ற ஒவ்வொரு தொகுப்பாளர்கள் மற்றும் போட்டியாளர்களுக்கு மனசில் பட்ர வகையில் ரொம்ப
அமைதியாவும் அதே நேரத்தில் தன்னோட கருத்துக்களை ரொம்ப அழுத்தமாகவும் சொல்லி இருக்காங்க.

இந்த வீடியோவை பார்த்த பால சரவணன் கமெண்டில் இதுக்கு மேல இந்த விஷயத்தை இவளோ அன்பாவும், அழகாவும் உரக்க சொல்ல முடியுமான்னு தெரியல இனி ஒருத்தருடைய உருவத்தை
வச்சு அவங்களுடைய தொழிலை பற்றியும் கேலி பண்ணாதீங்க ப்ரண்ட்ஸ் என்று சொல்லி, தலை வாங்குகிறேன் தாயே என்று சொல்லி தீபாவை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தாய்குலத்தையும் வணங்கி இருக்காரு
நடிகர் பால சரவணன்.

ஆனா இறுதியில் இந்த வீடியோவும் prank வீடியோதா என்று தெரிய வந்து இருக்கு. ஆனா இந்த வீடியோ பல பேருக்குள்ள தாக்கத்தை ஏற்படுத்த இந்த விடியோக்கு நிறைய பேர் வரவேற்பு
கொடுத்துட்டு இருக்காங்க என்றே சொல்லலாம். தற்போது body shaming நிறைய பேருடைய மனசை பாதிச்சுட்டு இருக்கு என்றே சொல்லலாம்.

6 thoughts on “nini 2 பற்றிய ரக்ஷிதா எமோஷனல் வீடியோ!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube