CinemaSerial

வளைகாப்பு நடந்து முடிந்த நடிகை நீலிமா ராணி!! | Neelima rani baby shower

Neelima baby shower: நீலிமாவும் ஈசையும் செப்டம்பர் 4, 2008 இல் திருமணம் செய்துகொண்டனர்… மற்றும் சமீபத்தில் 14 வருட திருமண மகிழ்ச்சியைக் கொண்டாடினர். இவர்களுக்கு அதிதி என்ற பெண் குழந்தை உள்ளது..

நீலிமா ஒரு குழந்தை கலைஞராக தொழில் வாழ்க்கையின் ஆரம்பத்தில் தொடங்கி பல்வேறு மொழிகளில் 30 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து உள்ளார்..

நீலிமாராணி அவர்கள் நிறைய சீரியலில் நடித்து உள்ளார்.. அந்த சீரியல் அனைத்தும் மக்கள் இடத்தில மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தது..

இவர் நடித்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்திலும் நடித்து இருக்கிறார்..

இவர் நடித்த சீரியல் ஆனா கோலங்கள் சீரியல் (ரேகா அர்ஜுனாக), மெட்டி ஒலி சீரியல் (சக்தி செல்வம்) மகாபாரதம் தொடர் (ருக்மணி தேவி), தாமரை சீரியல் (சினேகா/கவிதாவாக), தலையணைப் பூக்கள் சீரியல் (மல்லிகாவாக) மற்றும் வாணி ராணி (டிம்பிள் ), என இவை அனைத்தையும் கூறலாம்…

neelima 2nd baby shower

Neelima rani baby shower

இவர் கடைசியாக நடித்ததை அரண்மனை கிளி சீரியல் கூட இவருக்கு மக்கள் மனதில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.. முக்கியமாக கருதப்பட வேண்டிய ஓன்று இவர் அந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்..

வில்லி கதாபாத்திரத்தில் நடித்தும் மக்கள் இவருக்கு அதிகமா ஆதரவாக இருந்தார்கள்.. இவருக்காகவே சீரியல் பார்த்த ரசிகர்கள் எல்லாம் உள்ளனர்.. இப்போது நடிகை நீலிமா ராணி அவர்களுக்கு வளைகாப்பு மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்து இருக்கு..

ஹோட்டல் பீமாஸ்யில் இந்த செலிப்ரட்டின் நடந்து இருக்கு..இந்த நிகழ்ச்சில் நீரில் நிறைய சினிமா பிரபலங்களும் சின்னத்திரை பிரபலங்களும் நேரில் கலந்து கொண்டு தங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்து இருக்காங்க..

இதை தொடர்ந்து பல பிரபலங்கள் சோசியல் மீடியா மூலமாக வாழ்த்துகளை தெரிவித்து இருக்காங்க.. அதனை தொடர்ந்து ரசிகர்கள் பலர் இவருக்கு வாழ்த்துகளையும் ஆதரவை தெரிவித்து உள்ளனர்..

மக்கள் மற்றும் ரசிகர்கள் மனதில் நீலிமா ராணி இன்னும் சீரியலின் ராணியாக கூறப்படுகிறார்..

இவர் மிகவும் நல்லபடியாக குழந்தையை பெற்று எடுக்க வேண்டும் என்று மக்கள் தங்களுடைய ஆதரவை மிகவும் தெரிவித்து இருக்கின்றனர்..

மக்கள் மீண்டும் இவர் நடிக்க வர வேண்டும் என்று மிகவும் ஆவலாக எதிர்பார்த்து வருகின்றனர்.. இவருடைய நடிக்க வந்தால் மற்ற வில்லி கதாபாத்திரங்களுக்கு மிகவும் போட்டியாக இருப்பார்.. அனால் இவர் இனி நடிப்பாரா மாட்டாரா என்பது கேள்வி குறிதான்..

அம்மாவான அஞ்சலி பிரபாகரன்!!! ரசிகர்கள் வாழ்த்து!!

கலக்க போவது யாரு என்பது ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ. இந்த நிகழ்ச்சி சிவகார்த்திகேயன் , ரோபோ சங்கர் , அருண்ராஜா காமராஜ் மற்றும் பல நட்சத்திரங்களை கோலிவுட் துறைக்கு வழங்கியுள்ளது.

ஈரோடு மகேஷ், ஆதவன், மதுரை முத்து, வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி ஆகியோர் இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக உள்ளனர்.

இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் ஆத்திக வரவேற்பை பெற்று திகழ்ந்தது.. உலகத்தில் உள்ள அனைவரையும் சிரிக்க வைத்த இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களும் பெரும் அளவில் இருந்தனர்.. இந்த நிகழ்ச்சியானால் விஜய் டிவி மக்கள் மனதில் இன்னும் அதிக வரவேற்பை பெற்றது..

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்ற அனைவருமே திரைப்பட த்துறையில் ஏதோ ஒரு இடத்தில தங்களுடைய திறமையை வெளிக்காட்டி தான் வருகின்றனர்..

Anjali prabhakaran

Anjali prabhakaran

அந்த வகையில் கலக்கபோவது யாரு நிகழ்ச்சின் மூலம் புகழடைந்த அஞ்சலி மற்றும் பிரபாகரன் அவர்களும் ஒருவர்..

இவர்களுக்கு மக்கள் இடத்தில ஒரு நல்ல மதிப்பு உள்ளது.. அஞ்சலி மற்றும் பிரபாகரன் இவர்கள் இருவருமே காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார்கள்..

இவர்களுக்கு மக்கள் மற்றும் ரசிகர்கள் என அனைவரும் இவர்களுக்கு ஆதரவாகவே இருந்தார்கள்..

இவர்களுடைய காமெடியை அனைவரும் விரும்பி பார்ப்பார்கள்.. கலக்கபோவது யார் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருப்பது போல இவர்கள் இருவரின் காமெடிக்கும் ரசிகர்கள் பலர் உள்ளனர்..

அப்போது இவர்களுடைய காமெடி கொடிகட்டி பரவ தொடங்கி இருந்தது..

அதுமட்டும் இல்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஞ்சலி அவர்கள் சின்னத்திரை தொடர்களில் கூட நடிச்சி இருந்தாங்க..

குறிப்பாக தேன்மொழி பி.எ சீரியலில் நடிச்சி இருந்தாங்க.. இந்த சிசேரியலில் நடித்ததன் மூலம் இல்லத்தரசிகளின் மனதிலும் நல்ல இடத்தை பிடிச்சிவச்சிட்டாங்க..

அதுபோல mr அண்ட் mrs சின்னத்திரை சீசன் இரண்டுல இவர்கள் இரண்டுபேரும் கலந்துகொண்டு தங்களுடைய காதலை மிகவும் அருமையாக வெளிப்படுத்தி இருந்தாங்க.. மற்றவர்களை பொறாமை கொள்ளும் அளவிற்கு நிறைய விசயங்கள் செய்து இருந்தாங்க..

அதுவும் அவர்களுடைய நடிப்பையும் மிகவும் அழகாக வெளிப்படுத்தி இருந்தாங்க..

இப்ப இருக்கற இந்த நிலையில அஞ்சலி அவர்கள் கர்ப்பமாக இருப்பதாக அவருடைய சமூக வலைதள பக்கத்துல தெரிவித்து இருக்காங்க..

இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் வாழ்த்துகளைதெரிவித்து இருக்காங்க..

இப்போது இவர்கள் இரண்டுபேரும் மிகவும் பிஸி ஆகா இருப்பாங்க அப்டினு நிறைய பேரு சொல்லிட்டு இருக்கற இந்த நிலையில இவர்களை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் அஆர்வத்தில் உள்ளனர்.. ஆனால் இதை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை..

6 thoughts on “வளைகாப்பு நடந்து முடிந்த நடிகை நீலிமா ராணி!! | Neelima rani baby shower

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube