Cinema

மீண்டும் விருதை தட்டி சென்ற நயந்தாராவின் படம்!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

‘கூழாங்கல்’ இந்த படத்தின் பெயர் மிக எளிமையாக இருந்தாலும் இந்த படம் நிறைய ரசிகர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கு.. வளர்ந்து வரும் நடிகர்களில் ஒரு பெரிய அளவில் உயர்ந்து வரும்
நடிகைகளில் ஒருவர் நயந்தாரா.. இவர் சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கி தற்போது திரையுலக ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை ,நயந்தாரா என்றே சொல்லலாம்.. அந்த அளவுக்கு
அவங்களோட நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்காங்க.

நயந்தாரா அவங்களோட காதலர் விக்னேஷ் சிவன் கூட சேர்ந்து தயாரித்த படம்தா கூழாங்கல்.. இந்த படத்தை பி. எஸ். வினோத் ராஜ் இயக்கி இருக்காரு.. இந்த படம் குடிகார தந்தைக்கும் மகனுக்கும் இடையில் உள்ள
உறவை உணர்த்தும் கதை.. இந்த படம்த்திற்கும் அந்த படம் ஏற்படுத்திய தாக்கத்திற்கும் சொல்ல வார்த்தைகளே இல்லை என்றே சொல்லலாம்.. இந்த படத்தை சர்வதேச விழாக்களுக்கு கொண்டு போவதாக
ஏற்கனவே விக்னேஷ் சிவனும் நயன்தாராவும் சொல்லி இருந்தாங்க..

இதுக்கு அப்பறம் கூழாங்கல் படம் நெதர்லாந்தில் இருக்கிற ரோட்டர்டம் சர்வதேச விழாவில் போட்டியில் திரையிடப்பட்டது. அதன் பிறகு இந்த படம் சிறந்த படத்திற்க்கான விருதை பெற்றது.. இந்த படத்தை
பார்த்தவர்களுக்கு தெரியும் அது எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியது என்று.. மிக பெரிய அளவில் அனைவரின் மனதிலும் இடம் பிடித்த படம் என்றே சொல்லலாம். விக்னேஷ் சிவன் மற்றும் நயந்தாரா
நினைத்தது போல் இந்த படம் மக்கள் மனதில் ஒரு நல்ல வரவேற்பை கொடுத்து இருக்கு..

இந்த நிலையில் தற்போது கூழாங்கல் படம் இத்தாலியில் நடந்த சார்ட்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு சிறந்த படத்திற்கான விருதை பெற்று இருக்கு.. நயன்தாராவும் விக்னேஷும் இதற்காக
மிக பெரிய அளவில் மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருக்கின்றனர்.. இந்த விருத்திற்காக படக்குழுவினருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கூழாங்கல் படத்தை ஓ.டீ.டீ தளத்தில் வெளியிட முயற்சி நடக்கின்றது
என்று தகவல் வெளியாகி இருக்கு.. இந்த செய்தியை கேட்டவுடன் ரசிகர்கள் மனதில் ஆர்வம் அதிகரித்து இருக்கு என்றே சொல்லலாம்.

6 thoughts on “மீண்டும் விருதை தட்டி சென்ற நயந்தாராவின் படம்!! ரசிகர்கள் மகிழ்ச்சி!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube