Serial

என்றென்றும் புன்னகை தென்றல் பற்றி அறியாதவை!

Enrenrum punnagai thenral biography

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை மதியம் 3 மணிக்கு போயிட்டு இருக்கிற சீரியல் என்றென்றும் புன்னகை. இந்த சீரியலோட ஹீரோயின் தென்றல் பற்றி பார்க்கலாம்.

தனிப்பட்ட தகவல்:

என்றென்றும் புன்னகை சீரியலில் தென்றலாக நடிக்கறவங்களோட உண்மையான பெயர் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ். இவங்களுக்கு அஞ்சனா என்று ஒரு நிக் நேம் இருக்கு. இவங்க மே 16, 1992 இல் பெங்களூரில் பிறந்து இருக்காங்க. இவங்களுக்கு இப்போ வயது 27 ஆகுது. இவங்க அப்பா பெயர் ஸ்ரீனிவாஸ் , அம்மா பெயர் ராதா. அதோட இவங்களுக்கு அஷ்விதா, ஹர்ஷினினு ரெண்டு தங்கச்சிங்க இருக்காங்க.

படிப்பு:

நட்சத்திரா பெங்களூரில் இருக்கிற Sacred hearts girls high school ல படிச்சு இருக்காங்க. அப்புறம் இவங்க Halsuril irukkara ST. Anne’s girls PU college ல படிச்சி முடிச்சு இருக்காங்க.

சீரியல் வாழ்க்கை:

நட்சத்திரா ஸ்டார் சுவர்ணாவில் ஒளிபரப்பான கிருஷ்ணா ருக்மணி என்ற கன்னட சீரியலில் ருக்மணியாக நடிச்சு நடிகையாக அறிமுகம்
ஆனாங்க. இதுக்கு அப்பறம் தெலுங்கில் ஒளிபரப்பான கோதண்ட தீபம் என்ற தெலுங்கு சீரியலில் பட்டுவாக நடிச்சு தெலுங்கு ஆடியன்ஸ்க்கும் அறிமுகம் ஆனாங்க. அடுத்து இவங்க நடிச்ச புன்னகை சீரியலும் வெற்றியடைஞ்சதுனால தெலுங்கு படம் ஓர் யூனிட்டில் ஹீரோயினாகவும் , தமிழ் சீரியல்களிலும் நடிக்க வாய்ப்பு கிடைச்சது.

இதுக்கு அப்பறம் சன் டீவியில் ஒளிபரப்பான மாயா சீரியலில் எட்சா என்ற நெகடிவ் கதாபாத்திரத்தில் நடிச்சு தமிழ் அடிஎஸ்க்கும் அறிமுகம் ஆனாங்க. இதுக்கு அப்பறம் இவங்களுக்கு கலர்ஸ் தமிழில் சிவகாமி சீரியலில் ஹீரோயின்னாக நடிக்க வாய்ப்பு கிடைச்சது. சிவகாமி சீரியல் மூலமா தமிழ் ஆடியன்ஸ் மத்தியில் ரொம்பவே பேமஸ் ஆனா நட்சத்திரா , இப்போ ஜீ தமிழில் என்றென்றும் புன்னகை சீரியலில் தென்றலாக நடிச்சுட்டு இருக்காங்க.

திரைப்பட வாழ்க்கை:

நட்சத்திரா செதிளோ செய்யஸி செப்பு பாவா என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடிச்சு சினிமாவில் அறிமுகம் ஆனாங்க. இதுக்கு அப்பறம்
இவங்களுக்கு திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது.

இண்டெர்வியூ:

என்றென்றும் புன்னகை சீரியல் ரீசெண்டா 100 எபிசோட் முடிச்சு இருக்காங்க. இந்த சீரியல் ஆடியின்ஸ் மத்தியில் ஒரு நல்ல பேர எடுத்த இருக்கு. இந்த சீரியல் ஸ்டார்டிங்ளையே ஒரு 10 எபிசோட்லையே நல்ல ரெஸ்பான்ஸ் கெடச்சதுனு சொல்லி இருக்காங்க. நட்சத்திரா விஜய் மாதிரி ஒரு மாப்பிள்ளை வேணும்ன்னு ஒரு இன்டெர்வியூவில் சொல்லி இருக்காங்க. அந்த மாதிரி இன்னும் யாரு கெடைக்கலன்னு வறுத்த பட்டு இருக்காங்க. நட்சத்ராவிற்கு விஜய்னா ரொம்ப பிடிக்கும். இவங்க தமிழ் படம் நிறைய பாக்கறதா சொல்லி இருக்காங்க. விஜயோட துப்பாக்கி படம் ரொம்ப பிடிக்கும்னு சொல்லி இருக்காங்க. இந்த படத்தை ஒரு 100 டைம்ஸ் பாத்து இருப்பங்களாம். இப்போவும் யார் கல்யாணத்தை பற்றி பேசினாலும் விஜய் மாதிரி மாப்பிள்ளை கிடைச்சா கல்யாணம் பண்ணிக்கறன்னு சொல்லி இருக்காங்க.

இன்டெர்வியூவில் இவங்களோட பேஷன் ஸ்டேட் பற்றி கேக்கும் போது, அதுக்கு இவங்க நான் ரொம்ப பேஷன்னா இருக்க மாட்ட சிம்ப்பில்லாத இருப்பனு சொல்லி இருக்காங்க. இவங்க இண்டிபெண்டெண்டா இருக்கணும்னு ஆச படுவாங்கலாம். இவங்க ஹிந்தி டீச்சரோட அட்வைஸ் மூலியமாதா இவங்க ஆக்ட்டிங் குள்ள வந்ததா சொல்லி இருக்காங்க. இவங்க 16 வயசுலையே நடிக்க ஆரமிச்சு இருக்காங்க. அந்த டைம்ல நடிக்க ரொம்ப கஷ்டமா இருந்துச்சு ஒன் இயர் ட்ரைனிங்கிலையே போய்டுச்சுன்னு சொல்லி இருக்காங்க. இவங்க டான்ஸரா இருக்காங்க. நட்சத்திரா தமிழ் மற்றும் தெலுங்கு சீரியல்
இரண்டும் ஒரே மாதிரிதா இருக்குனு சொல்லி இருக்காங்க.

தமிழ் சீரியலில் நடிக்கறது ரொம்ப நேட்டுரல்லா இருக்கு அது பாக்க ரொம்ப எமோஷனல்லா இருக்குனு சொல்லி இருக்காங்க. நட்சத்திரா சிவகாமி சீரியலில் I.P.S ஆகா நடிச்சு இருக்காங்க அதுதா இவங்களுக்கு ரொம்ப பிடிச்ச கதாபாத்திரம்னு சொல்லி இருக்காங்க. அந்த போலீஸ் காஸ்டியூம் போட்டு நடிக்கறது ஒரு தனி பீள்னு சொல்லி இருக்காங்க. இன்டெர்வியூவில் துப்பாக்கி படத்தில் வர I am waiting டைலாக்க வேற வேற மாடுலேஷன்ல சொல்லி இருக்காங்க. இவங்க அவங்க லைபில் பெங்களூரை ரொம்ப மிஸ் பண்றதா சொல்லி இருக்காங்க. அவங்களோட ரூம் அவங்களோட ஹோம் இவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்லி இருக்காங்க. இவங்க இண்டஸ்ட்ரிக்கு வந்ததுதா ஒரு பெரிய ஷாக்கிங்கான விஷயம்னு சொல்லி இருக்காங்க.

என்றென்றும் புன்னகை சீரியல்:

என்றென்றும் புன்னகை சீரியல் என்பது ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் ஒரு இந்திய தமிழ் மொழி சோப் ஓப்ரா ஆகும். இது தீபக் சிங்கி மற்றும் நித்தின் ஐயர் ஆகியோருடன் நட்சத்திரா ஸ்ரீனிவாஸ் நடித்த 16 மார்ச் 2020 அன்று திரையிடப்பட்டது. இந்த தொடரை நடிகை நீலிமா ராணியின் இசை பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

கதை சுருக்கம்:

ஆகாஷ் தனது பாட்டிக்கு எப்போதும் கீழ்ப்படிந்த ஆனந்தலின் பேரன். ஆகாஷ் ஆகாஷுக்கு ஒரு மணமகளை நாடுகிறார். மேலும்
அவளைத் தேர்ந்தெடுப்பதற்கான தெளிவான அளவுகோல்களைக் கொண்டுள்ளார். அவர் ஒரு வானொலி ஜாக்கியான தென்றலை கடந்து வந்து அவரை பற்றிய அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறார். மேலும் அவர் தென்றலால் ஈர்க்கப்பட்டார். பின்னர் அவள் ஆகாஷுக்கு சரியான பெண் என்று முடிவு செய்கிறாள். ஆகாஷை திருமணம் செய்ய தென்றலின் குடும்பமும் ஏற்றுக்கொள்கிறது. ஆகாஷ் தனது பாட்டியின் கைப்பாவை
என்று பின்னர் தென்றல் அறிகிறாள்.

ஆகாஷுக்கு தனித்தன்மை இல்லை என்பதையும், சில சமயங்களில் அவர் திருமண முன்மொழிவை கூட நிராகரித்ததையும் தென்றல் விரும்பவில்லை. மறுபுறம், சித்தார்த் ஒரு வானொலி ஜாக்கியும் ஆவார். அவர் தென்றலுடன் இணைந்து பணியாற்றி அவளைக் காதலிக்கிறார். மீதமுள்ள கதை, ஆகாஷ் மற்றும் சிதார்த் இடையே தென்றலின் தேர்வு பற்றி இருக்கும்..

6 thoughts on “என்றென்றும் புன்னகை தென்றல் பற்றி அறியாதவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube