Cinema

சம்பளத்தை அதிகப்படுத்திய நடிகை பற்றி குவியும் சர்ச்சைகள்!!! வருத்தத்தில் டாப்ஸீ!!

டாப்ஸீ பன்னு, இவங்க 1 ஆகஸ்ட் 1987 இல் டெல்லியில் பிறந்தாங்க. இவங்க ஒரு இந்திய நடிகை. இவங்க தமிழ் மட்டும் இல்லாமல் ஹிந்தி, தெலுங்கு போன்ற பல மொழி படங்களிலும்
நடிச்சிட்டு இருக்காங்க. ஆனால் மற்ற மொழிகளை காட்டிலும் இவங்க ஹிந்தி மொழி திரை படத்திற்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கறாங்கனு சொல்லலாம்.

டாப்ஸீ முதலில் மாடெல்லிங் தான் பண்ணிட்டு இருந்தாங்க. பின்பு இவங்களுக்கு தெலுங்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைச்சது. “ஜூம்மண்டி நாடம்” என்ற தெலுங்கு திரைப்படம் மூலியமாக
தான் இவங்க சினிமாவில் அறிமுகம் ஆனாங்க. பின் டேவிட் தாவனின் நகைச்சுவை படமான “ஷாஷ்மே பாடூர்” என்கிற ஹிந்தி படம் மூலியமாக பாலிவுட் திரை உலகில் அறிமுகம் ஆனாங்க.

தமிழ் சினிமாவில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்த “ஆடுகளம்” என்ற படத்தில் அறிமுகம் ஆனாங்க. என்னதான் இவங்க பல மொழிகளில் நடித்தாலும் இவங்க ஹிந்தி படமான “பிங்க்” என்ற படத்தில் நடித்த பிறகு தான் ரசிகர்கள் மத்தியில் அதிகம் கவரப்பட்டாங்க. பிறகு இவங்களுக்கு பாலிவுட் திரை உலகில் தனி ரசிகர்கள் பட்டாளமே வந்தது. டாப்ஸீகாக இயக்குனர்கள் கதாநாயகியை முன்னிலை படுத்தும் கதைகளை எழுத ஆரம்பிச்சாங்க.

இந்த நிலையில் டாப்ஸீ தன் சம்பளத்தை உயர்த்தினாங்க இதனால் இவங்க பல சர்ச்சைகளை சந்திச்சாங்க. இது குறித்து பெட்டி ஒன்றில் நடிகைகளை விட நடிகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதை எதிர்ப்பதாகவும், சினிமா துறையில் நடிகை, நடிகர்களுக்கு இடையில் சம்பளம் விசியத்தில் பெரும் வித்தியாசம் உள்ளது எனவும், ஒரு நடிகை அதிக சம்பளம் கேட்டல் அவர்களை பாலிவுட் நடிகர்கள் விமர்சிக்கின்றனர் எனவும், மேலும் அவர்களை சர்ச்சைக்குரியவர் என முத்திரை குத்துகின்றனர் எனவும் கூறியுள்ளார்.

ஒரு நடிகர் அதிக சம்பளம் கேட்டல் அதை ஏற்கவும், ஆனால் நடிகை அதிக சம்பளம் கேட்டல் அதை விமர்சிப்பதும் ஏன் என கேட்கிறார். சம்பளம் அதிகம் கேட்பது அவரவர் வெற்றிக்கான உரிமை எனவும், டாப்ஸீயுடன் ஒரே காலக்கட்டத்தில் வந்த நடிகர் அவர்களை விட மூன்று அல்லது ஐந்து மடங்கு அதிக சம்பளம் வாங்குவதாகவும் கூறி வருத்தம் அடைகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube