பாலு மஹேந்திரன் சாரை ஒரு வாரம் ஃபாலோ பண்ணேன்- அங்க ஆரம்பிச்சது தான் என்னோட சினிமா வாழ்க்கை!!
Vijay sethupathi movie life:
விஜய் சேதுபதி அவர்களுக்கு ஒரு மேடையில் அவருக்கு ஒரு விருது கிடைத்தது. அப்போ விஜய்
சேதுபதி அவர்கள் எப்படி நா சினிமா வாழ்க்கைக்கு எப்படி வந்தாங்கனு ஒரு மேடையில் ரொம்ப எமோஷனலா சொன்னாரு அது என்னானு பாக்கலாம் வாங்க.
ஒரு மேடையில் விஜய் சேதுபதி கிட்ட உங்களோட சினிமா போரட்டத்தில் எந்த மாதிரியான நம்பிக்கை உங்களைய இந்த இடத்துக்கு கொண்டு வந்திச்சுன்னு கேட்டாங்க. அதுக்கு விஜய் சேதுபதி என்னோட அண்ணண் என்னைய நிறைய போட்டோ எடுத்துக்கிட்டா இருப்பாங்க என் அண்ணனோட பிரண்ட்ஸ் எல்லாம்
என்னா சும்மா உன் தம்பியே போட்டோ எடுத்துக்கிட்டு இருக்கனு கேப்பாங்களாம், அதற்கு என் தம்பி போட்டோ எடுக்குற வரைக்கும்
சிரிச்சிட்டே இருப்பான் உங்களால முடியுமா என்று கேட்டார்.
என்னோடைய சிரிப்பு நல்ல இருக்கு என்று நிறைய பேர் சொன்னாங்க. விஜய் சேதுபதி வந்து ஒரு ஸ்டேஜில் ட்ரை பண்ண ஆரம்பித்தாங்கலாம் ஒரு சிலர்
அசிங்க படுத்துவங்க அப்ப வந்து எதோ யோசிக்கத்தோணும் என்று சொன்னார். இவர் வந்து ஒரு வாரம் பாலு மஹேந்திரன் அவர்களை ஃபாலோ பன்னாங்களாம். அவர் வந்து என் தம்பி வேனும் என்று கேட்டாங்களாம், அதற்கு விஜய் சேதுபதி நடிக்க சான்ஸ் வேணும் என்று சொன்னார். அவர் வந்து விஜய் சேதுபதியை உன் கண்ணும் சிரிப்பும் நல்லா இருக்கு நாளைக்கு வா போட்டோ எடுக்கலாம் என்று சொன்னாராம்.
அதுக்கப்பறம் அவருடைய வீட்டுக்கு விஜய் சேதுபதி போறாங்களாம். அப்போ அவர் வீட்டு மாடியில் போட்டோ எடுத்தாராம். ஒரு வாரம் கழிச்சி வந்து போட்டோ காப்பிய வாங்கிக்கோ ஒரு போட்டோ என்கிட்ட இருக்கட்டும் நான் படம் எடுத்தா சான்ஸ் தரேன் என்று சொன்னாராம். அந்த மூமண்ட் வந்து எனக்கு மிகவும் சந்தோசமா இருந்தது என்று சொன்னார். அவரே போட்டோ எடுத்துகிட்டாரு கண்டிப்பா நா நடிப்பேன் என்று எனக்கு நம்பிக்கை வந்தது என்று சொன்னார்.
இப்படித்தான் என்னோடைய சினிமா வாழ்க்கை ஆரம்பித்தது என்று ரொம்ப எமோஷனால ஒரு மேடையில் விருது வாங்கும் போது விஜய் சேதுபதி அவர்கள் சொன்னார்.
நான் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது பெரும்பாலும் இதைதா செய்வேன்! – த்ரிஷா
த்ரிஷா கிருஷ்ணன், இவங்க 4 மே 1983 இல் தமிழ்நாட்டில் பிறந்தாங்க. த்ரிஷா ஒரு இந்திய நடிகை மற்றும் மாடெல்லா இருக்காங்க. இவங்க தமிழ் மொழிகளில் மட்டும் இல்லாமல் தெலுங்குபட மொழிகளிலும் நடித்து வராங்க. இவங்க நடித்த அனைத்து படங்களும் மிக பெரிய அளவு வெற்றியை தரும்னு சொல்லலாம். இவங்களுடைய நடிப்பும் ரசிகர்கள் மனதில் ஆழமாக பதியும்.
த்ரிஷா, சிறு வயதில் ஒரு குற்றவியல் உளவியலாளராக அசைபட்டாங்க. படிப்பை முடிந்ததற்கு பிறகே நடிப்பதில் ஆர்வம் காட்டினாங்க. ப்ரியதர்ஷனால் இயக்கபட்ட லேசா லேசா என்ற படமில் அறிமுக நாயகியாக தமிழ் சினிமாவில் வந்தாங்க. பிறகு “எனக்கு 20 உனக்கு 18″என்ற படத்தில் நடித்தாங்க. இந்த இரண்டு படமும் வெளியிடுவதற்கு தாமதம் ஆனது. அதற்கு பிறகு த்ரிஷா நடித்த படம் “மௌனம் பேசியதே”, இந்த படத்தில் த்ரிஷா சூர்யாவிற்கு எதிராக நடித்திருப்பாங்க.
இந்த படத்தை தொடர்ந்து கில்லி, ஆயுத எழுத்து , ஆறு, பேரரசு, ஆதி, கிரீடம், பீமா, குருவி போன்ற படங்களில் நடித்தாங்க. மேலும் ஜெயம் ரவியுடன் நடித்த “உனக்கும் எனக்கும்” படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இன்றளவும் இருக்காங்க. சில நாட்களுக்கு முன்பு த்ரிஷா கொடுத்த இன்டெர்வியூவில் தனது வாழ்க்கையில் சந்தித்த கஷ்டங்களையும், தோல்விகளையும் கூறி இருக்காங்க. அதில் இவங்க சினிமா என் வாழ்வில் ஒன்றியது எனவும் இதிலிருந்து நான் விலகமாட்டேன் என்றும் சொல்லி இருக்காங்க.
மேலும் த்ரிஷா ரொமாண்டிக், மாஸ் என பல விதமான படங்களிலும் நான் நடிக்கின்றேன் என கூறி இருக்காங்க. இவங்களுடைய ஸ்ட்ரெஸ்பஸ்டர் என்னனு கேட்டதற்கு த்ரிஷா, என்னுடைய ஸ்ட்ரெஸ்பஸ்டர் நான் தான் நான் ஸ்ட்ரெஸ்ஸாக இருக்கும்போது பெரும்பாலும் என்னுடன் தான் அதிக நேரம் செலவிடுவேன், பிறகு என்னுடைய குடும்பம் மற்றும் பிரண்ஷூடன் இருப்பேன் என சொல்லிருக்காங்க. மேலும் மேரேஜ் பற்றிய கேள்விக்கு மேரேஜ் செய்து கொள்வேன் யார் என்னுடைய எல்லா சூழ்நிலைகளிலும் எனக்கு துணையாக இருப்பாங்களோ அவங்களை கண்டிப்பாக நான் மேரேஜ் செய்து கொள்வேன். அப்படி இல்லைனாலும் எனக்கு ஓகே தான் என சொல்லிருக்காங்க.
மேலும் எனக்கு எந்த நடிகையுடனும் எந்த பிரச்சனையும் இல்லை, நடிகை அசினுடைய ஒர்க் எனக்கு ரொம்ப பிடிக்கும் இவர்களுடன் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சொல்லிருக்காங்க. சமந்தா, கீர்த்தி சுரேஷ் இவங்களை நான் என்னுடைய காம்பெட்டிஷனா நினைக்கவில்லை எனவும் சொல்லிருக்காங்க.
அதற்கு பிறகு எனக்கு ஃபுட்னா ரொம்ப பிடிக்கும் கண்டிப்பாக நான் ஃபுட் சார்ந்த ஏதாவது ஒரு பிசினஸ் பண்ணுவேன் எனவும் சொல்லிருக்காங்க. இது போல் தன்னுடைய கடினமான உழைப்பில் தான் நான் இந்த நிலைமைக்கு வந்தேன் எனவும் தன்னுடைய பல இன்டெர்வியூவிலும் சொல்லிருக்காங்க.