Serial

பாக்யலக்ஷ்மி தொடரில் நடித்து வரும் ஜென்னிபர் பற்றி தெரியுமா?

விஜய் டிவியில் தினந்தோறும் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30க்கு ஒளிபரப்பாகும் மெகாத்தொடர் பாக்யலக்ஷ்மி.அதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜென்னிபர் பற்றி பின்வருமாறு பார்க்கலாம் வாங்க.

பிறந்த ஊர் மற்றும் பெற்றோர் :

ஜென்னிபர் அவர்களின் உண்மையான பெயர் திவ்யா கணேஷ். அவங்க பிறந்த ஊர் ராமநாதபுரம்.1994 ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் தேதி பிறந்துருக்காங்க.

திவ்யா கணேஷ் அவர்களின் அப்பா பெயர் கணேஷ். திவ்யா அவர்களுக்கு பாட்டு கேக்க ரொம்ப புடிக்கும்,நடனம் மற்றும் படம் பார்க்கவும் ரொம்ப புடிக்குமாம். அதுதான் அவங்க ஹாப்பிஸ்.அவங்க உடற்பயிற்சியில் ரொம்ப கவனமா இருப்பாங்க.

பள்ளி , கல்லூரி :

திவ்யா அவர்கள் ராமநாதபுரத்தில் இருக்கும் பள்ளியில் படிப்பை முடிச்சிருக்காங்க.அவங்க கல்லூரி படிப்பை சென்னையில் முடிச்சிருக்காங்க. திவ்யா அவர்கள் (Bachelor of laws) பண்ணிருக்காங்க.

வழக்கறிஞர் ஆக ஆசை :

திவ்யா அவர்களின் அப்பா ஒரு வழக்கறிஞயர் என்பதால் திவ்யாவுக்கும் வழக்கறிஞயர் ஆகணும்னு ஆசை. அதனால் திவ்யா அதற்கான வழிமுறைகளை பின்பற்றி போனாங்க.

திரையுலகத்திற்கு செல்லும் பயணம் :

அந்த நேரத்துல திவ்யா அவர்களுக்கு குறும்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதில் நடிக்க ஆரம்பிச்ச திவ்யா திரையுலகில் பாதம் பதிக்க ஆசை பட்டாங்க. அதை அவங்க அப்பாவிடம் சொன்னதும் அவர் அதற்கு சம்மதிக்கவில்லை.அப்பா கிட்ட பேசி போராடி அனுமதி வாங்கிய திவ்யா திரையுலகிற்கு வந்தாங்க.

சின்னத்திரையில் அவர்களின் பங்கு :

திவ்யா கணேஷ் அவங்க சின்னத்திரையில் முதன்முதலில் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட ரத்னம் அவர்களின் தயாரிப்பில் கேளடி கண்மணி என்னும் தொடரில் செம்பருத்தி என்னும் கதாபாத்திரத்தில் நடிச்சாங்க.

அதைத்தொடர்ந்து ஜீ தமிழில் லட்சுமி வந்தாச்சு சீரியலில் ஒரு வில்லி கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. அது மட்டுமில்லாமல் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட சுமங்கலி என்னும் மெகத்தொடரில் அணு என்னும் கதாபாத்திரத்திலும், மகராசி என்னும் தொடரில் ராகினி தமிழரசன் என்னும் கதாபாத்திரத்திலும் நடித்து தனது திறமையை மக்களிடையே சேர்த்தாங்க.

இப்போ அதிகமா பிரபலம் ஆன கதாபாத்திரம் பாக்யலக்ஷ்மி சீரியலில் வரும் ஜென்னிபர் கதாபாத்திரம் தான் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.திவ்யா அவர்கள் பாக்யலக்ஷ்மி சீரியலில் அவங்க மேக்கப் அவங்களே பண்ணிப்பாங்களாம்.

வெள்ளித்திரை :

திவ்யா கணேஷ் அவர்கள் 2019ஆம் ஆண்டு அடங்காதே என்னும் படத்திலும் கண்ணாடி என்னும் படத்திலும் நடிச்சிருக்காங்க.

கதைச்சுருக்கம் :

பாக்யலக்ஷ்மி என்னும் மேகத்தொடரில் பாக்யாவுக்கு மூன்று குழந்தைகள் செழியன்,எழிலன் மற்றும் இனியா. இவர்கள் பாட்டி, தாத்தா என ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வராங்க.

ஜென்னிபர் வீட்டில் அம்மா அப்பா என மொத்தமாக மூன்று பேர் தான் இருப்பாங்க. ஜென்னிபர் செழியனுக்கு பள்ளியில் படிக்கும் போதே நண்பர்கள். ஜென்னிபர் அடிக்கடி செழியன் வீட்டுக்கு வந்துப்போவது உண்டு.

அது செழியன் பாட்டிக்கு பிடிக்காது. அவங்க பாக்யலக்ஷ்மியை கூப்பிட்டு சொல்லுவாங்க. இனிமேல் ஜென்னிபர் நம்ப வீட்டுக்கு வரக்கூடாது தப்பாகிரும் அப்படினு சொல்லுவாங்க. ஆன பாக்யா அப்படிலாம் இருக்காதுனு எதும் நெனச்சிக்க மாட்டாங்க.

ஜென்னிபரும் செழியனும் காதலிச்சிட்டு இருப்பாங்க. ஜென்னி வீட்டுல சொல்லுவா அவங்க வீட்டுல எல்லாரும் ஒத்துக்குவாங்க. ஆன செழியன் வீட்டுல சொல்லவே மாட்டான்.

ஜென்னியும் அவங்க அப்பா அம்மாவும் இன்னும் செழியன் வீட்டுல ஏன் சொல்லலன்னு ஜென்னி கிட்ட சண்டை போடுவாங்க. ஜென்னியும் செழியன் கிட்ட சண்டை போடுவா வீட்டில் சொல்லச் சொல்லி.ஆன செழியன் வீட்டில் சொல்ல ரொம்ப பயப்படுவான்.

ஒரு கட்டத்தில் செழியன் வீட்டுக்கு தெரிய வரும். யாருமே அதுக்கு சம்மதிக்க மாட்டாங்க. ஏன்னென்றால் ஜென்னி கிறிஸ்துவ மதம் செழியன் ஹிந்து.அதனால ஜென்னி வீட்டுலயும் ஒத்துக்க மாட்டாங்க.

அதற்கு பிறகு செழியன் அம்மா பாக்யா எல்லாருகிட்டயும் பேசி சம்மதம் வாங்க ரொம்ப போராடுவாங்க.எல்லாரும் பாக்யாவ ரொம்ப திட்டுவாங்க.அந்த கல்யாணம் நடக்க தன் மகனுக்காக போராடிக்கொண்டே இருப்பாள்.

பிறகு சம்மதம் கிடைச்சாலும் சில கருத்து வேறுபாடுங்களும் மன கசப்புகளும் வந்துட்டே இருந்தது. எல்லா கஷ்டங்களையும் தாண்டி செழியன் ஜென்னிபர் கல்யாணத்தை பாக்யா நல்லபடியாக நடத்தி முடிச்சிட்டாங்க.

இவ்வளவு தடைகளையும் வலிகளையும் தாங்கி தன்னோட காதல் கனவை அடைத்தாங்க செழியனும் ஜென்னிபரும். நல்லபடியாக வாழ்க்கையும் போயிட்டு இருக்கு. இரண்டு வேறுபட்ட மாதங்கள் சார்ந்த திருமண கருத்துதான் ஜென்னிபர் கதாபாத்திரம்.

வழக்கறிஞர் ஆகணும்னு ஆசை பட்டு அவங்க பாதை திரையுலகிற்குள் வந்துருக்கு. நம்ம திறமை எதுவா வேணுனாலும் இருக்கலாம். அதில் நாம்ப எப்படி முயற்சி பண்ணி முன்னாடி போறோம் எல்லாத்துலயும் வெற்றி பெற்றுக்கொண்டு வாழ்கிறோம் அது தான் வாழ்க்கை.

6 thoughts on “பாக்யலக்ஷ்மி தொடரில் நடித்து வரும் ஜென்னிபர் பற்றி தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube