Cinema

கணவர் இறந்த போது மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மந்திரா பேடி!

திரையுலகில் இப்போ நிறைய அதிர்ச்சியான சம்பவம் நடந்து வருகின்றனர். கொரோனாவுக்கும் மாரடைப்புக்கும் நிறைய நடிகர்கள் உயிர் இழந்து வருகின்றனர். நடிகைகளின் கணவர் அவங்க குடும்பத்தில் யாராவது இப்படி வந்துட்டு நிறைய அதிர்ச்சி சம்பவங்கள் நடந்து வருகின்றனர். அதுபோல தான் சிம்பு பட நடிகையின் ஒருவருடைய கணவர் உயிர் இழந்து இருக்காங்க.

பாலிவுட் நடிகை மந்திரா பேடி ஓட 49 பது வயது நிறைவடைந்த கணவர் ராஜ் கௌஷல் மாரடைப்பால் உயிர் இழந்த சம்பவம் இப்ப மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்திருக்கு மற்றும் சோகத்தையும்
ஏற்படுத்திருக்கு. 1995 ஆம் ஆண்டு நடிகர் ஷாருக்கான் அவர்களுடைய படங்களில் நடித்ததன் மூலம் நடிகையா அறிமுகமானார். அதை தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடிச்சி இருக்காங்க.

மந்திரா பேடி தமிழில் சிம்புவுடன் மன்மதன், சகோ, அடங்காதே இந்த படங்களிலும் நடிச்சி இருக்காங்க. மேலும் தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்காங்க. 1999 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆனா ராஜ் கௌஷல் என்றவரை திருமணம் பண்ணியிருக்காங்க. அவங்களுக்கு வீர் என்ற ஒரு மகனும் மற்றும் தாரா என்ற மகளும் இருக்காங்க.

இந்த நிலையில் மந்திரா பேடி ஓட கணவர் ராஜ் கௌஷல் அவர்களுக்கு 49 பது வயது தான் ஆச்சி. இவங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்காங்க. இந்த மாதிரி ஒரு நிலமையில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். நேற்று காலை 6.30 மணி அளவில் இவர் இறந்துட்டாங்க. இவருக்கு மும்பையில் வழக்கத்திற்கு மாறாக மந்திரா பேடி தன்னோடைய கணவரின் உடலை பாடையில் சுமந்து அவரே இறுதி சடங்குகளை செய்தார்.

இவர் செய்த காரியத்தை பார்த்து அனைவரும் அதிர்ச்சி அடைந்தார்கள். இறுதி சடங்குகளை செய்த போது மந்திரா பேடி கதறி அழுத புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் ராஜ் கௌஷல் மரணத்திற்கு எல்லாரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். மந்திரா பேடிக்கும் மற்றும் அவங்க குடும்பத்திற்கும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வராங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow Us

Subscribe us on Youtube