முதன் முறையாக காதல் தோல்வி குறித்து பேட்டி அளித்த நடிகை, அட!!! அனுபாமா பரமேஸ்வரனா!!!!
அனுபாமா பரமேஸ்வரன், இவங்க ஒரு இந்திய நடிகை. இவங்க தெலுங்கு, மலையாளம் மற்றும் தமிழ் போன்ற மொழிகளில் நடிச்சிருக்காங்க. இவங்க மலையாள படமான “ப்ரேமம்” என்ற திரைப்படத்தில் “மேரி ஜார்ஜ்” என்ற கதாபாத்திரத்தில் அறிமுகம் ஆனாங்க. இவங்க நடித்த முதல் படத்திலேயே ரொம்ப பிரபலமானங்கனு சொல்லலாம்.
பிறகு அடுத்தடுத்து சில படங்களிலும் நடிச்சாங்க. தெலுங்கு படமான “சதமனம் பாவதி”, தமிழ் படமான “கொடி” மற்றும் கன்னட படமான “நடசர்வபோவ்மா” போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிச்சிருக்காங்க. இவங்க நடித்த படத்திற்காக சில விருதுகளையும் வாங்கிருக்காங்க.
2 வது ஃஐபா உச்சத்தில் சிறந்த துணை நடிகை விருதை தெலுங்கு படத்திற்காக வாங்கிருக்காங்க. மேலும் ரைசிங் ஸ்டார் வகையில் அப்சரா விருதை வாங்கிருக்காங்க. அனுபாமா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பாங்க. இவங்களோட ஃகர்லீ ஹார்காகவே இவங்களுக்கு நிறைய ஆண் ரசிகர்கள் இருக்காங்கனு சொல்லலாம். இளைஞர்கள் எல்லாரும் இவங்களை தன்னோட க்ரஸ்னு சொல்லி சுத்தராங்கனே சொல்லலாம்.
இப்படிப்பட்ட இவங்க இன்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு தன்னோட காதல் தோல்வி குறித்து முதல் முறையாக பதில் அளித்து உள்ளார். இவங்க இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களோடு உரையாடினாங்க. அதில் ரசிகர் ஒருவர் நீங்கள் நிஜ வாழ்க்கையில் யாரையாவது காதலித்தது உண்டா?என கேட்டார். இதற்கு அனுபாமா நான் ஒருவரை காதலிக்கிறேன் என்றும் ஆனால் அந்த காதல் இப்போது இல்லை என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
மேலும் ரசிகர்கள் உங்களுக்கு பிடித்த உணவு என்ன? என கேட்ட கேள்விக்கு அனுபாமா என் அம்மா கையால் சமைத்த உணவு அனைத்தும் எனக்கு பிடிக்கும் என்ற பதிலை கூறியுள்ளார். மேலும் இவங்களுக்கு இசை ரொம்ப பிடிக்கும் என்று சொன்னாங்க. அதிலும் “மம்முட்டி” நடித்த “மௌனம் சம்மதம்” என்ற படத்தில் “கல்யாணம் தேன் நிலா” என்ற பாடலை நூறு தடவைக்கு மேல் கேட்டிருப்பாங்களாம்.
மேலும், இவங்க தற்போது அதர்வாவுடன் “தள்ளிபோகாதே” என்ற படத்தில் நடிப்பதாகவும் வெற்றி, தோல்வி எதுவாயினும் அதை சமமாக எற்றுக்கொள்ள கற்று வருவதாகவும் தன் ரசிகர்களிடம் சொல்லிருக்காங்க.